முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா பிறப்பித்த உத்தரவு!!

251

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தழிழக சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் சசிகலாவை, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தமிழக சிறைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக முதல்வராக எடப்பாடியும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ள தகவலை அறிந்த சசிகலா புன்னகைத்துள்ளார்.

முதல்வரும், அமைச்சர்களும் பெரும்பான்மையை நிரூபித்த பின் தன்னை சந்திக்க பெங்களூரு வந்தால் போதும் என அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.