குழந்தையை கடித்து உடலில் சூடு வைத்த தாய் : பதற வைக்கும் சம்பவம்!!

287

இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. தன் குழந்தையிடம் அன்பாக இருந்து வந்த பூனத்தின் செயலில் திடீர் மாற்றம் ஏற்ப்பட்டது.

திடீரென தன் குழந்தையின் உடலில் கடித்தும், சூடு வைத்தும் பூனம் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்த செயல் அவர் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. குழந்தையை அவர் இப்படி தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பூனத்தின் கணவர் ராகுல் இது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி பூனத்துக்கு மனநல சிகிச்சையளித்தனர்.

சிகிச்சையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் உள்ளதால் பூனம் மீது வழக்கு பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.