வவுனியாவில் இடம்பெயர்ந்த மூன்று பேர் வாக்களிக்க தனியான வாக்குச்சாவடி!

467

ele

இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மூன்று பேர் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து 150 கிலோ மீற்றரில் உள்ள கொக்காவில் பகுதியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 644 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 89 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 799 பேர் வாக்களிப்பதற்காக மதவாச்சியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.