பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேல் மாகாணத்தில் சாதாரண தர மாணவர்களின் தவணை பரீட்சைகளை நடத்தி முடிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
10 மற்றும் 11ம் தர மாணவர்களுக்கு பொது நேர அட்டவணை அடிப்படையில் தவணை பரீட்சை மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
உரிய பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 10ம் தர மாணவர்களின் தவணை பரீட்சையை பொதுநலவாய மாநாட்டின் பின்னர் நடத்துவதற்கு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேல் மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.