வவுனியாவில் முன்னாள் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

2347

வவுனியாவில் இன்று(19.02.2017) காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராசா இளங்கோவன்(வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும்.

இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது சடலத்திற் அருகில் தூக்குக் கயிறு ஒன்று காணப்படுகிறது. ஆனாலும் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.