சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது சினிமா நூற்றாண்டு விழா : ஜெயலலிதா ஆரம்பித்து வைக்கின்றார்!!

300

cinema

தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இவ்விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.
இதில் தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பூங்காக்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தினமும் இரவு இலவசமாக படங்கள் திரையிடப்படுகிறது. தியேட்டர்களும் மின் ஒளியில் ஜொலிக்கின்றன.
சத்யம், அபிராமி, உட்லண்ட்ஸ், 4 பிரேம் தியேட்டர்களில் தினமும் இலவசமாக பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் படங்களும் திரையிடப்படுகிறது. கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் இப்படங்களை பார்க்கிறார்கள். நூற்றாண்டு விழாவையொட்டி 24ம் திகதி வரை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.