இந்தியாவில் 5 வயது சிறுமி 71 முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மும்பை Nalasopara பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குறித்த குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த 71 வயது முதியவர், 5 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார்.
இதைகண்ட அக்குடியிருப்பை சேர்ந்த ஒருவர் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், குடியிருப்பாளர்கள் காவலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
குற்றவாளியை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினி குடியிருப்பை சேர்ந்த 22 வயது இளைஞரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது நினைவுக் கூரதக்கது.