சென்னையில் 3 வயதுச் சிறுமியை கடத்தி கொடூரமாக கொலை செய்த கும்பல்!!

289

சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிறுமி கிருத்திகா. நேற்று பிற்பகல் சிறுமி கிருத்திகா அருகே உள்ள வீட்டுக்கு விளையாட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமியின் தயார் வெகு நேரமாகியும் சிறுமியை காணாததால் குறித்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் சிறுமியை அங்கு காணவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து கலக்கமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மணலி விரைவுச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் உடலில் பலத்த காயங்களுடன், வாயில் துணியை வைத்து மூடிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரித்த போது, அது மாயமான சிறுமி கிருத்திகா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், சிறுமி கிருத்திகாவை அழைத்து சென்றதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, சிறுமி கிருத்திகா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.