வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் : 64 Tab வழங்கப்பட்டது!!

318

 
வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (20.02.2017) காலை 9.30 மணியளவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , 64 களப்பணியில் ஈடுபடும் பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு டப் ( Tab) வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்த்திட்டத்தின் நான்காம் கட்டமாகவே இன்று வவுனியாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எஸ்.திருவாகரன் ( சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு), வைத்தியர் திரு.கேசவன் ( சமுதாய மருத்துவ நிபுணர் – வடக்கு), திரு. சுபாகரன்( குழுத்தலைவர் – ஆசிய மன்றம்), திருமதி.பவானி (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) , பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், பிராந்திய சேவைகள் பணிமணையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.