உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!!

682

இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சையின் செய்முறைப்பரீட்சைக்ள ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்திற்காக கல்விப்பொதுத்தராதார சாதாரணத்தரப்பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்தோடு 5 ஆம் தரப் புலமைப்பரீசீல் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.