வவுனியாவில் எதிர்வரும் 24ம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (21.02.2017) விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரையும் அழைத்து இடம்பெற்ற கலந்துரையாடலிலே இம் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்பினை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியைடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.
எனினும் கொழும்பில் அரச தரப்பினருடம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித முடிவு எட்டப்படாத நிலையில் வவுனியாவில் தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.