முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிராக பா.உ சி.சிவமோகன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்!!

228

 
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் இன்று முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அவருடன் சேர்ந்து காணி மீட்பு போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பீற்றர் இளச்செழியன் மற்றும் லவகுசன், தீபன், யசோதரன் மற்றும் இளைஞர் அணியினர் இணைந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் மீது பகிடிவதைகள், பாலியல் சேட்டைகள், ஆயுதக் கிடங்கு அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு காரணமாக புதுக்குடியிருப்பு மத்தி இராணுவ முகாம் இருப்பதாக கூறி இராணுவ முகாம் முன்னால் பிரதேச செயலகத்தின் வாசலில் கண்டன உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

பிலக்குடியிருப்பு மக்களின் காணி பறிப்புக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் புதுக்குடியிருப்பு இராணுவ முகாமை அகற்ற கோரி விரிவடைந்தது. கேப்பாபுலவு மக்களின் 243 ஏக்கர் காணியை விடுவிப்பதான ஜனாதிபதியின் உத்தரவு இராணுவத்தால் மீறப்பட்டது குறிப்பிடதக்கது.