வவுனியா முதியோர்களின் ஆன்மீகச் சுற்றுலா!!

233

 
வவுனியாவில் உள்ள 50 வரையான முதியோர்கள் வெளிக்குளம் முதியோர் சங்க உறுப்பினர்கள் மூலம் விசேட ஆன்மீக சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம், வவுனியா லயன்ஸ் கழகத்தின் தலைவர் தமிழ் அழகன் அணுசரனையின் உதவியுடன் வெளிக்குளம் பிரதேச முதியோர்கள் பலரும் தம்பதிகளாக ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் பேருந்தின் மூலம் ஏற்பாடு செய்த இந்த சுற்றுலா வெளிக்குளம் முதியோர் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.நடராஜா ஓய்வு பெற்ற கோவில் குளம் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி ந. ஜீவரட்ணம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு மகிழ்வாக நிறைவடைந்தது.

பொற்கோயில் எனப்படும் வவுனியா அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம், தண்ணீரூற்று ஊத்தங்கரைப் பிள்ளையார் கோவில் என்பவற்றிற்கு சென்று ஆத்மீக வழபாடு, பிரார்த்தனை என்பவற்றில் ஈடுபட்டதுடன் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடும் இடம்பெற்றது.

இங்கு நடைபெற்ற வழிபாட்டில் வடமாகாண சமூகசேவைத் திணைக்களப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா.இராஜமனோகரன், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இ.தசரதராஜகுமாரன், ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் குகதாஸன் ஆகியோரும் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தாகள் கி.வசந்தரூபன், அ.தவீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

முதியோரின் மனங்களில் மகிழ்ச்சிப் புன்னகை பூத்ததுடன் இவ்வாறான சுற்றுலாக்களில் தாம் அடிக்கடி ஈடுபடுவது மன ஆறுதலையும் உற்சாகத்தையும் தருவதாகத்தெரிவித்தனர்.