வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 24 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

282

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்ததாக தெரிவித்து கடந்த இரண்டு வாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 24 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று (21.02) குறிந்த 24 பேருக்கு எதிராக இடம்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவானின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த இருவாரங்களில் கணிசமானளவு டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. நகரை அண்டிய பகுதிகளிலே அதிகளவானவர்கள் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். எனவே தங்களது பகுதிகளை சிரமதானம் மூலம் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை அகற்றுமாறும் தொண்டர், சுகாதார பரிசோதகர்கள், மலேரியா தடை இயக்க உத்தியோகத்தர்களின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களைப் பார்வையிட்டு வருவதாகவும் அரச மற்றும் அரசசார்பற்ற திணைக்களங்கள் அரச விடுதிகள் என்பனவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டதாகவும் வவுனியா சுகாதார சேவைகள் பொது சுகதார பரிசோதகர் மேஜெயா மேலும் தெரிவித்துள்ளார்.