கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞர் படுகாயம்!!

342

 
கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து மட்டக்களப்பு மாவட்டம், தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழுகாமத்திலிருந்து தும்பங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வானகமும், தும்பங்கேணிப் பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய அரசரெத்தினம் விஜிதரன் என்பவரே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.