வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டத்திற்கு எதிரான பதாதை!!

294

 
வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பாதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாதையானது இன்று அதிகாலை முதல் வைத்தியசாலையின் முன்பக்க மதிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், “அதில் தகுதியற்ற வைத்தியர்களை உருவாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.. நோயாளர்களின் உயிர் ஆபத்தில்” என எழுதப்பட்டுள்ளது.

இந்த வாசகமானது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 10 ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் குழுவினால் தனியார் மருத்துவக் கல்லூரி சைட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடி கட்டப்பட்டதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.