பாகிஸ்தானைச் சேர்ந்த சாகசக் கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் 4 கிலோகிராம் எடையுள்ள செங்கற்களைத் தூக்குவது, பற்களினால் இரும்புக் கம்பியை வளைப்பது போன்ற சாகசங்களால் வியக்க வைக்கிறார்.
32 வயதான குலாம் பாருக் எனும் இவர், 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான சாகசங்களைச் செய்து பெரும் எண்ணிக்கையானோரை கவர்ந்துள்ளார். தனது தாடையினால் பஸ்ஸை கட்டி இழுப்பதும் இவற்றில் ஒன்றாகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை பார்த்த பின்னர் இத்தகைய சாகசங்களைத் தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக குலாம் பாருக் தெரிவித்துள்ளார்.
இரு விமானங்களை தனது தாடையினால் கட்டி இழுக்க வேண்டும் என்பது தனது இலட்சியம் என்கிறார் குலாம் பாருக்.