வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையத்தில் காணப்பட்ட குளவிக் கூடு அழிப்பு!!

525

vav

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடொன்று இன்று சனிக்கிழமை காலை வவுனியா மலேரியா தடை இயக்கத்தினரால் அழிக்கப்பட்டது.

வாக்களிப்பு ஆரம்பமாகுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் உள்ள மரமொன்றில் காணப்பட்ட குளவிக்கூடு வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் போரில் மலோரியா தடை இயக்கத்தின் பொறுப்பதிகாரி தி. கோபிநாத் தலைமையிலான குழுவினரால் அழிக்கப்பட்டது.

நேற்றையதினம் வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலய வாக்களிப்பு நிலையத்திற்கு கடமைக்கு சென்ற அதிகாரிகள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் இதனையடுத்து குறித்த வாக்களிப்பு நிலையம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.