லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்களை லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!!

293

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் விஷ்ணு விச்சு மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கே வந்த 2 மகளிர் காவல் அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் வருமாறு மிரட்டியுள்ளனர். எதற்காக வரவேண்டும் என்று விஷ்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதால் இருவரும் வரவேண்டும் என மிரட்டியதுடன் மற்ற இரண்டு ஆண் காவலர்களின் உதவியுடன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல்நிலையத்தில் வைத்து காதலர்களை மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தியுள்ளனர்.

காவல்யிதுறையினரின் அத்துமீறலை சகிக்க முடியாத விஷ்ணு தனது செல்போனில் இருந்து இந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து, காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பகிரப்பட்டதையடுத்து பல்வேறு குழுவினரும் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறோம். ஆகையால் இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒருபொருட்டல்ல என அப்பெண் கூறியுள்ளார்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உரிய புகார் பெறப்பட்ட பின்னர் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது மிகவும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் காவலர்கள் வேண்டுமென்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.