வவுனியாவில் இருளிலும் தொடரும் மக்களின் போராட்டம்!!

228

 
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(22.02.2017) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாக இப் போராட்டமானது தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 5 தொடக்கம் 6 வருடங்களாக வசிக்கும் சுமார் 40 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வனத்துறையினரால் தொந்தரவுக்குள்ளாவதாகவும் தாம் வாழும் காணியை தமக்கு வழங்குவதற்கான வாக்குறுதி வழங்கியபோதிலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தே இம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமது நிரந்தர காணிக்கு போராடும் 30பொதுமக்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் இரவு உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.