சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை சவாரியில் ஈடுபட்ட நபர்!!

524

சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நபர் ஒருவர் குதிரையில் சவாரி செய்தவாறு பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற சம்பவம் தென் ஆபிரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது.

கிழக்கு கேப் நகரிலுள்ள மேற்படி சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை மீது அமர்ந்தவாறு நுழைந்த அந் நபர், அங்குமிங்கும் திரிந்தார். பின்னர் அந் நிறுவனத்தின் முகாமையாளரால் அந் நபர் விரட்டப்பட்டார்.

அந் நபர் சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை சவாரியில் ஈடுபடுவதைக் கண்ட ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “அக் குதிரையைப் பார்த்தவுடன் விளம்பரத்துக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என எண்ணினேன்.

அந் நபரை முகாமையாளர் துரத்தியதைப் பார்த்தபோதே நிலைமை புரிந்தது. அவ் வேளையில் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் வாய் திறந்தவாறு இக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.