உணவுக்கும் வழியில்லை எனக் கூறி பிச்சை எடுக்கும் பலர், பெருந்தொகைப் பணத்துக்கு உரிமையாளர்களாக இருப்பது குறித்த செய்திகள் பல நாடுகளிலிருந்தும் அடிக்கடி வெளியாகுகின்றன.
இவ்வகையில், காரில் வந்து இறங்கி, பிச்சையெடுக்கும் நபர்கள் தொடர்பான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் அண்மையில் ஒரு குழுவினர் காரில் வந்து இறங்கிய பின்னர் பிச்சையெடுக்க ஆரம்பித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
மேற்படி குழுவினர் ருமேனியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் கேம்பிரிட்ஜ் நகரில் வந்திறங்கினர்.
பின்னர் அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தனித்தனியாகப் பிரிந்து சென்று பிச்சையெடுக்க ஆரம்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனத்தை தரித்து வைத்திருந்தமைக்கான கட்டணத்தையும் இவர்கள் செலுத்தினர் என நேரில் கண்ட ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.







