வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். .
89 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் காலை 7 மணியில் இருந்து ஆர்வத்துடன் வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் வாக்களிப்பு நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கடமையில் ஈடுபட்டதுடன் அனைத்து பிரதேசங்களிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
சற்று முன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளதுடன் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வவுனியாவிலிருந்து முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.