வானில் தோன்றிய அரிய தீ வானவில்!!

751

அரிய தோற்றம் கொண்ட “தீ வானவில்” ஒன்று சிங்கபூர் வான் பரப்பில் தோன்றியுள்ளது. இதனை சிங்கபூர் மக்கள் பலரும் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது “தீ வானவில்” குறித்து சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தனது முகப்புத்த பதிவில் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒளி-விலகல் எனப்படும் அரிய விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் “தீ வானவில்” தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என அமைப்பு பதிவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து நாசா கருத்து தெரிவிக்கையில், சூரியன் வானில் 58 டிகிரி கோணத்தில் மேகங்களுடன் ஊடுருவும் போது “தீ வானவில்” உருவாகின்றன என குறிப்பிட்டுள்ளது.