வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள்!!

217

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் தங்களின் குறைகளை கேட்டறியவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்து இன்று (23.02.2017) அவ்விடத்திலியே இரண்டு நாள் போராட்டம் தொலைந்ததா தமிழ் தேசியம்?, தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே?, எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவைதானா?, தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.