வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து இரண்டாம் நாளாக தமது நிலத்தை பெற்றுத்தருமாறு கோரி வவுனியா இராசேந்திரகுள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்ட தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று இரவு விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் தம்மால் முடிந்தளவில் உயர்மட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்ததுடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கட்கு இரவுநேர உணவையும் வழங்கியிருந்தார்.