வவுனியாவில் வெட்டப்பட்ட 40 மாடுகளின் கடத்தல் முறியடிப்பு!!

231

 
வவுனியாவில் வெட்டப்பட்ட 40மாடுகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக துரத்திச் சென்று கைப்பற்றியுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ்.லவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொடுவத்தில் நேற்று (23.02.2017) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், ஏதும் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பிற்கு வெட்டப்பட்ட மாடுகள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாடுகள்  மாடு வெட்டும் தொடுவத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சில உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்று உதவி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கைப்பற்றிய வெட்டப்பட்ட மாடுகள் மற்றும் வாகனச்சாரதி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த மாடுகள் அனைத்தும் வயதில் குறைந்தது பசுமாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.