மகன் விட்டுச் சென்ற குப்பைகளை பொதி செய்து விடுதிக்கு அனுப்பி வைத்த தாய்!!

266

 
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகனின் அறையில் கிடந்த குப்­பை­களை பொதி செய்து, தபால் மூலம் அம்­மா­ண­வனின் விடு­திக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

18 வய­தான கொனோர் கொக்ஸ் எனும் இந்த இளைஞர் பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் நியூ வில்­மிங்டன் நக­ரி­லுள்ள வெஸ்ட்­மின்ஸ்டர் கல்­லூ­ரியின் முதல்­வ­ருட மாணவர் ஆவார்.

அவர் தங்­கி­யுள்ள விடு­தியின் முக­வ­ரிக்கு அண்­மையில் ஒரு பொதி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. தனது தாயாரின் கைப்பட முக­வரி எழு­தப்­பட்ட பொதியைக் கண்­ட­வுடன், தனக்கு உண­வுப்­பொ­ருட்­களை தாயார் அனுப்­பி­யுள்ளார் என அவர் எண்­ணினார்.

ஆனால், அந்த கார்ட்போட் பெட்­டியை திறந்­த­வுடன் கொனோர் கொக்­ஸுக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. வெறும் குப்­பை­களே அவற்றில் கிடந்­தன. இது தொடர்­பாக கொனோர் கொக்ஸ் கூறு­கையில், “இந்த குப்­பையைக் கண்­ட­வுடன் நான் எனது தாயாரை தொலை­பே­சியில் அழைத்து, தவ­று­த­லாக வேறு பொதியை அனுப்பி விட்­டீர்­களா எனக் கேட்டேன்.

அவர், “இல்லை. அது உனது அறையில் நீ விட்டுச் சென்ற குப்­பைகள்” என பதி­ல­ளித்தார்” எனத் தெரி­வித்­துள்ளார். தனது தாயார் நகைச்­சுவை உணர்வு நிறைந்­தவர் எனக்­கூறும் கொனோர் கொக்ஸ், தனக்கு அனுப்­பப்­பட்ட பொதியை படம்­பி­டித்து சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ளார்.