சிறுவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட நபர் : பதற வைக்கும் சம்பவம்!!

570

 
இந்தியாவில் 6 வயது சிறுவனை கொலை செய்து அவன் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் Mohammad Naeem, இவருக்கு Monis (6) என்னும் மகன் உள்ளான்.

சம்பவத்தன்று Monis தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். வெளியில் போய் விட்டு Mohammad வீடு திரும்பிய போது அவர் மகன் Monis காணாமல் போயுள்ளான்.

அவர் மகனை எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இதனிடையில், Mohammad வீட்டருகே ஒரு வயதான பெண்ணுக்கு Nazim Mian என்னும் வாலிப வயதில் ஒரு மகன் உள்ளார்.

அவர் வீட்டில் Nazim தட்டில் எதையோ வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அருகில் போய் அவர் தாய் அதை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

காரணம், தட்டில் காணாமல் போன சிறுவன் Monisன் உடல் பகுதிகளான கை, கால், கழுத்து போன்றவைகள் துண்டாக இருந்துள்ளது.

இது குறித்து பின்னர் பொலிசுக்கு தெரிவிக்கப்பட பொலிசார் Nazimமை கைது செய்ததோடு அவன் சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றினார்கள். Nazimவிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.