வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

615

 
வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப்பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் சுமார் 47 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வன இலாகாவினரால் தொந்தரவுக்குள்ளாகுவதாகவும்
இதேவேளை, தமக்கு காணி உறுதிப் பத்திரமோ, வீட்டுத்திட்டமோ இது வரை வழங்கப்படவில்லை எனவும் சுட்டடிக்காட்டியே இத் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.