மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இ.போ.ச பேரூந்துக்கள் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் தனியார் பேரூந்துக்கள் 30 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் வழங்கி வருகின்றன.
இச் சேவைகள் நாளை (25.02.2017) காலை வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.