வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

290

 
வவுனியாவில் நேற்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை சுழற்சி முறையில் இரண்டாவது நாளாக இன்றும் மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தாம் தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.