வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

228

 
வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் இவர்களுக்கு வாக்குறுதியளித்து கடிதம் வழங்கப்படும் என வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.