குழந்தைக்கு மது கொடுத்த நபர் கைது : குழந்தை வைத்தியசாலையில்!!

311

குழந்தைக்கு மது கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மொனராகலை பஹலகம ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

33 வயதுடைய நபர் ஒருவரே இரண்டு வயதுடைய குழந்தைக்கு இவ்வாறு மதுவை கொடுத்துள்ளார்.

கைது செய்த நபரை வெல்லவாய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றது.