291 கோடி ரூபா லொத்தர் பரிசை நெருங்கிய நண்பியுடன் பகிர்ந்து கொண்ட பெண்!!

253

பிரிட்டனைச் சேர்ந்த நெருங்கிய நண்பிகள் இருவர் லொத்தர் சீட்டிழுப்பில் தமக்குக் கிடைத்த சுமார் ஒன்றைரைக் கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 291 கோடி ரூபா) பரிசுப் பணத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

லொரின் ஸ்மித் (54) எனும் பெண் தான் இந்த லொத்தர் சீட்டை வாங்கினார். இந்த லொத்தர் சீட்டுக்கு கிடைத்த 15,342,900 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பரிசு பணத்தை தனது நண்பி பௌலா பராகுளோவுடன் (45) பரிசை பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பிகள். முன்னர் ஒரு தடவை லொத்தரில் கிடைத்த 25 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (4,750 ரூபா) பரிசை இவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

தற்போது பெருந்தொகை பரிசு கிடைத்த நிலையிலும் அப் பணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இந்த லொத்தர் பரிசினால் தமது நட்பு மாறப் போவதில்லை என்கின்றனர் லொரினும் பௌலாவும்.