வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

243

 
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் இணைந்து இலவச மூக்கு கண்ணாடியினை வழங்கினர்.

இன் நிகழ்வில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.அத்தனாயக்க , சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி உ.நிரோசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.