வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு தென்னிலங்கை முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஆதரவு!!

574

 
வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்து முஸ்ஸிம், சிங்கள மக்கள் இப் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் அவர்களின் துக்கத்தினையும் கேட்டறிந்தனர்.