வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

229

 
வவுனியாவில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27.02.2017) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6 நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டுப் பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6 வருடங்களாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47 குடும்பங்களுக்கும் அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2 மணியலிருந்து 4.30 மணிவரையும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்தார் அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30 மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.