வவுனியாவில் பிள்ளைகளைத் தேடி உணவை தவிர்த்து போராடிய தாயின் நிலை இது!!

381

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – நெடுங்கேணி, வேலங்குளத்தை சேர்ந்த கனகரட்ணம் தவமணி (வயது 64) எனும் தாயாரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாயின் இரண்டு பிள்ளைகளும் 12.05.2009 ஆம் ஆண்டு இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் வவுனியாவில் நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த தாய் தற்பொழுது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.