நாயின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதிகள் : அதிர்ச்சி வீடியோ!!

646

ஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் கட்டிவிட்டுள்ள செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

எதிராளிகளை கொல்ல ஐ.எஸ் தீவிரவாதிகள் நாய் குட்டியின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி சதிசெயலில் ஈடுபடுவது தற்போது தெரியவந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்க்கும் ஈராக் நாட்டை சேர்ந்த 3 கிளர்ச்சியாளர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஒரு நாய் குட்டியின் உடலில் மூன்று சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் இருக்கிறது என அவர்கள் கூறுகின்றனர்.

அதை ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம் என கூறிய கிளர்ச்சியாளர்கள் அதை தாங்கள் செயலிழக்க செய்து விட்டோம் என கூறுகின்றனர்.

மேலும், இந்த வெடிகுண்டை பயன்படுத்தி 4 பேர் வரை கொல்லவும் அல்லது படுகாயம் அடைய வைக்கவும் முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.