தந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : பரிதாபச் சம்பவம்!!

529

 
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் நிறுத்துவதற்காக செல்லும் போது பஸ்ஸை பின்நோக்கி செலுத்திய போது, வீதி ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த 86 வயதுடைய முதியவர் பஸ்ஸின் பின்பகுதி சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பஸ்ஸை செலுத்திய சாரதியின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ஆறுமுகம் மாரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பஸ்ஸையும் பொலிஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.