திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஆவர்.
சமீபத்தில் நடந்த தமிழக அரசியல் பிரச்சனையில் கருணாஸ் சசிகலா தரப்பிற்கு ஆதரவளித்ததால் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகினார். பலர் சமூகவலைதளங்களிலும், போனிலும் அவரை விமர்சித்தனர். சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், தொகுதிக்கு வந்த அவரை கல், செருப்புகளை வீசியும் தாக்கினர்.
கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை இணையத்திலும் வெளியிட்டனர். வாட்ஸ் அப்பில் வேகமாக பரவிய கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த அவரது மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கு முழுக்க முழுக்க கருணாஸ் மற்றும் அவரது செயல்களுமே காரணம் என்று கூறப்படுகிறது.






