வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!

274

 
செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் – 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக செட்டிகுளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன், கிராம சேவையாளர் திரு.இளஞ்செழியன் மற்றும் சுகாதார அமைச்சரின் இணைப்புச்செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், அயற்பாடசாலை அதிபர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

100M ஓட்டம், 200M ஓட்டம், 400M ஓட்டம், அஞ்சல் ஓட்டம், இடைவேளை நிகழ்வுகள், விநோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், பெற்றோர் நிகழ்வுகள், பழைய மாணவர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கிண்ணங்களும், பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம், தனது 2016 இற்கான நிதியினூடாக இப்பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றினை வழங்கி வைத்ததாகவும், 2017ம் ஆண்டுக்கான நிதியினூடாக இப்பாடசாலைக்கு சமையல் அறை ஒன்றினை அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.