வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் 31 கிலோ கஞ்சா மீட்பு!!

325

 
வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் நேற்று (27.02.2017) கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 31 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.