வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!

298

 
வவுனியா சீட்(SEED) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது.

இப் பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்படவைப்பதை இலக்காக கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு விஷேட நிகழ்வாக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் திறனாய்வு போட்டிகள் இன்று (28.02.2017) காலை இடம்பெற்றது.

இன் நிகழ்வில் நுற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை இறுதி நிகழ்வு மார்ச் மாதம் (11.03.2017) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.