வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை!!

316

 வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் க.தர்மரட்ணம் இதனை தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதுடன், உடல் ரீதியான கேடுகளும் ஏற்படுகின்றன.
இதனால் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு முன்மாதிரியான செயற்பாடாக மார்ச் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சூழலை பாதுகாக்கும் செயற்திட்டத்தை முன்னெடுக்க இப்பாடசாலையில் பச்சைப்படையணி என்னும் மாணவர் குழு ஒன்றும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.