யுவதியின் படத்தை இணையத்தில் வெளியிட்டு பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்!!

604

யுவதி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தமையின் காரணமாக, குறித்த பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரையே பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பதுளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த யுவதியை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதும் யுவதி மற்றுமொரு இளைஞரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தன்னிடம் இருந்த யுவதியின் நிர்வாணப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது செய்யப்பட்டு, பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.