பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு தமது வீடுகளிலிருந்த நகைகளை திருடிக் கொண்டு தமது பேஸ்புக் காதலர்களுடன் தப்பிச்சென்ற உயர்தரம் கற்றுவந்த மாணவிகள் இருவர், பேலியகொடை பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் மாஹோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் அறிமுகமான தமது காதலர்களுடன் இம்மாணவிகள் இருவரும் முதலில் குறுந்தகவல்களின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் ஊடாக அறிமுகமா னதையடுத்து பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழில்புரியும் நோக்கில் பேலியகொடை பிரதேசத்தில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று தமது காதலர்களுடன் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் இம்மாணவிகள் இருவரும் தமது வீட்டிலிருந்து எடுத்துவந்த தங்க நகைகளை வெயாங்கொட பிரதேசத்திலுள்ள அடகு நிலையமொன்றில் விற்பனை செய்ததுடன் அதன்மூலம் கிடைத்த பணத்தில் தமது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இம்மாணவர்களின் காதலர்களில் ஒருவர் கடற்படையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து விலகியவர் எனவும், மற்றைய நபர் திருமணம் புரிந்தவரெனவும் அவருக்கு பிள்ளை ஒன்றும் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸாருக்கு கிடைத்த இருவேறு முறைப்பாடு களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவரின் முன்னாள் காதலனின் மூலமாக உளவாளி ஒருவரை ஈடுபடுத்தி மாணவிகள் உள்ள இடத்தினை கண்டுபிடித்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இம்மாணவிகள் இருவரும் மஹவ, நாகொல்லாகம மற்றும் மொரகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் பமுணுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.