கல்வியைக் கைவிட்டு, நகைகளைத் திருடி பேஸ்புக் காதலர்களுடன் சென்ற மாணவிகள் கைது!!

337

பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு தமது வீடு­க­ளி­லி­ருந்த நகை­களை திருடிக் கொண்டு தமது பேஸ்புக் காத­லர்­க­ளுடன் தப்­பிச்­சென்ற உயர்­தரம் கற்­று­வந்த மாண­விகள் இருவர், பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலையில் மாஹோ பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பேஸ்­புக்கில் அறி­மு­க­மான தமது காத­லர்­க­ளுடன் இம்­மா­ண­விகள் இரு­வரும் முதலில் குறுந்­த­க­வல்­களின் மூலம் தக­வல்­களை பரி­மாறிக் கொள்­வதன் ஊடாக அறி­மு­கமா னதை­ய­டுத்து பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு தொழில்­பு­ரியும் நோக்கில் பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வீடொன்­றினை வாட­கைக்கு பெற்று தமது காத­லர்­க­ளுடன் வசித்து வந்­துள்­ளனர்.

பின்னர் இம்­மா­ண­விகள் இரு­வரும் தமது வீட்­டி­லி­ருந்து எடுத்­து­வந்த தங்க நகை­களை வெயாங்­கொட பிர­தே­சத்­தி­லுள்ள அடகு நிலை­ய­மொன்றில் விற்­பனை செய்­த­துடன் அதன்­மூலம் கிடைத்த பணத்தில் தமது வீட்­டுக்கு தேவை­யான பொருட்­களை கொள்­வ­னவு செய்­துள்­ளனர்.

இம்­மா­ண­வர்­களின் காத­லர்­களில் ஒருவர் கடற்­ப­டையில் பணி­யாற்றி பின்னர் அதி­லி­ருந்து வில­கி­யவர் எனவும், மற்­றைய நபர் திரு­மணம் புரிந்­த­வ­ரெ­னவும் அவ­ருக்கு பிள்ளை ஒன்றும் காணப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மஹவ பொலி­ஸா­ருக்கு கிடைத்த இரு­வேறு முறைப்­பாடு களுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இவர்கள் நால்­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட மாண­வி­களில் ஒரு­வரின் முன்னாள் காத­லனின் மூல­மாக உள­வாளி ஒரு­வரை ஈடு­ப­டுத்தி மாண­விகள் உள்ள இடத்­தினை கண்­டு­பி­டித்­தி­ருந்­த­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

இம்­மா­ண­விகள் இரு­வரும் மஹவ, நாகொல்­லா­கம மற்றும் மொர­கொல்­லா­கம பிர­தே­சத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் பமுணுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.