போக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்!!

324

பொதுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 90%வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு சுமார் 2500 தனிப்பட்டவர்களுடன் நேர்காணல் மற்றும் கேள்விக்கொத்துக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளாந்தம் 12.1 வீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாராந்தம் 16.4 வீதப்பெண்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். மாதம் ஒன்றுக்கு 25.8வீதப்பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பிலும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பில் 53வீதமானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

எனினும் பொதுப்போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கான சட்டங்கள் குறித்து 74%வீதத்தினர் அறிந்து வைத்திருக்கவில்லை.

இதேவேளை, பொதுப்போக்குவரத்துக்களில் பாலியல் தொந்தரவுகள் காரணமாக 37%வீதப்பெண்கள் தமது பணிகளில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், 29% வீதமான பெண்கள் தமது கல்வியில் பாதிக்கப்படுவதாகவும், 44%வீதமான பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.