350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை நடாத்திய நபர்!!

252

ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பல்வேறு திருமண இணையதளங்களில் தனது பெயரை பதிவு செய்து கொண்ட இவர், அதன் மூலம் பெண்களுடன் பழகியுள்ளார். இணையதளத்தில் மூலம் சுமார் 350 பெண்களை காதலித்து வந்துள்ளார். இதில் கனடிய பெண் ஒருவரும் அடங்குவார்.

திருமண தளத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பல்வேறு பெண்களுக்கு திருமண தூது அனுப்பிய இவரின் இந்த மோசமான செயலை சைபர் கிரைம் கண்டுபிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐதராபாத் பொலிசார் நடத்திய விசாரணையில், நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்டி என்ற இவர் இதற்கு முன்னர், 9 குற்றசெயல்களில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் என்பதை அறிந்த பொலிசார், அவரை விரைந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

350 பெண்களை காதலித்து வந்துள்ளாரே தவிர அவர்களை திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.